ஜெயம் தங்கராஜா

எதிர்ப்பு அலை

அதிகாரத்திற்கு எதிரான எதிர்ப்பு அலையது

சதிகாரக் கும்பலின் முடிவு நிலையிது

சூழ்ச்சியால் வந்த ஒர் ஆட்சி

வீழ்ச்சியைக் காணும் ஓர் காட்சி 

குள்ளநரிகள் குதித்தே கும்மாளம் போட்டன

வெள்ளை மனங்கொண்டதாய் தங்களைக் காட்டின

சர்வவல்லமை பொருந்தியவரென பெயரும் சூட்டின

சர்வாதிகாரத்தாலே தம் ஆட்சியை ஓட்டின

நாளடைவில் தானே மக்களுக்கும் புரிந்தது

பாழடைந்த வாழ்க்கை யாராலென்று தெரிந்தது 

கலைக்கவே நரிகளை களைத்தவர் போராட்டம் 

நிலைக்கவோ நரிகளும் அரசியல் சூதாட்டம் 

ஊளையிட்டு மக்களை ஏமாற்றியது அந்தக்காலம் 

கோளைகளில்லை மக்களென்றுமென எடுத்தார் புதியகோலம்

வாழ்வதற்கு வழியில்லாமல்ச்செய்த அரசை துரத்தவே

ஆள்வதற்கு அருகதையான தலைவர்களை இருத்தவே

ஜெயம் 

14-04-2022

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading