புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

ஜெயம் தங்கராஜா

வசந்தத்தில் ஓர் நாள்

புதுப்புது பூக்களின் அனுதின பிரசவங்கள்
மதுவுண்டு வண்டதோ சுக சுரங்கள்
வசந்தத்திலோர் நாள் சோலையும் சிரித்தது
வசப்படுத்திய மனமதும் மகிழ்ச்சியால் விரிந்தது

கவிபாட அமர்ந்தேன் வார்த்தைகள் கொப்பளித்தன
தெவிட்டாது செந்தமிழும் சொற்களை அன்பளித்தன
காலங்களில் வசந்தம் சுகமான சுகந்தம்
கோலங்களின் வர்ணங்களால் கற்பனையும் விரியும்

அளவான குளிரால் இதயமோ இதமானது
நிலம் வருடி வெப்பமோ மிதமானது
அந்நாளோ பொன்நாளாய் கவியனெனை ஈர்த்தது
இந்நாளே நெஞ்சமதில் புல்லாங்குழல் ஊதியது

03-01-2024

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading