பண்படுமோ பண்பாடு ??

ரஜனி அன்ரன் (B.A) பண்படுமோ.....23.04.2026 யாதும்ஊரே யாவரும்கேளீர் என்றனர்அன்று யாதொரு பண்பாடுமின்றி வாழ்கின்றனர்இன்று பேதம்கடந்த நேசமே...

Continue reading

ஜெயம் தங்கராஜா

வசந்தத்தில் ஓர் நாள்

புதுப்புது பூக்களின் அனுதின பிரசவங்கள்
மதுவுண்டு வண்டதோ சுக சுரங்கள்
வசந்தத்திலோர் நாள் சோலையும் சிரித்தது
வசப்படுத்திய மனமதும் மகிழ்ச்சியால் விரிந்தது

கவிபாட அமர்ந்தேன் வார்த்தைகள் கொப்பளித்தன
தெவிட்டாது செந்தமிழும் சொற்களை அன்பளித்தன
காலங்களில் வசந்தம் சுகமான சுகந்தம்
கோலங்களின் வர்ணங்களால் கற்பனையும் விரியும்

அளவான குளிரால் இதயமோ இதமானது
நிலம் வருடி வெப்பமோ மிதமானது
அந்நாளோ பொன்நாளாய் கவியனெனை ஈர்த்தது
இந்நாளே நெஞ்சமதில் புல்லாங்குழல் ஊதியது

03-01-2024

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading