கவிதையே தெரியுமா

கவிதையே தெரியுமா காதலின்பம் கவிதையே கனியும் காலமே உனதாக்கி காசினியில் மலர்ந்தாயே கற்பகமே அற்புதமே கலையாத பொக்கிசமே நிற்பதம்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

நடிப்பு

இல்லாத குணத்தை இருப்பதாய் காட்டி
கல்லான மனத்துடன் பிழைப்பினை ஓட்டி
உள்ளொன்றும் வெளியொன்றுமாக வாழ்க்கையின் காட்சி
பொல்லாத மனிதரிவர் இருக்காது மனச்சாட்சி

நடிக்கத் தெரிந்தவனுக்கு அழகான மேடையிது
நடிக்கத் தெரியாதவனுக்கோ ஆபத்தான மேடையிது
நடிப்போ சிவாஜியும் தோற்றுப்போகும் நடிப்பு
துடிப்போ இதயத்தை மிஞ்சிவிடும் துடிப்பு

முகமூடி போட்டிருப்பார் அணிந்திருப்பதோ தெரியாது
அகத்தினுள்ளே வஞ்சம் பிறரதை அறியாது
அன்பான உறவெனவே அரவனைத்தே புன்னகைப்பார்
அண்மையிலே போகவிட்டே பின் நகைப்பார்

நிறங்களை மாற்றுவதில் பச்சோந்திகளையும் மிஞ்சிடுவார்
கறக்கவேண்டியதை கறக்க நட்பாகி கொஞ்சிடுவார்
பொய்யான வேஷம் மெய்யான நடிப்பு
மெய்யில்லா வாழ்க்கைதனை வாழ்வதிலே பிடிப்பு

இன்னொருவருக்கு ஏற்றால்போல் நம்மைநாம் மாற்றுவதா
பன்றிகளின் கூட்டத்துடன் மலந்தின்ன சேருவதா
பிடித்த மாதிரி நடிப்பது பாவம்
படித்தவரும் வேஷமிட்டே அடைந்தனரே இலாபம்

துணிவான் கோவப்படுவான் சாமியின் பிள்ளை
அனியாயத்திற்கு கும்பிடுவான் சாத்தானின் பிள்ளை
இருந்தும் நடிப்பவரிடையில் சில நல்லவர்களுமுண்டு
ஒருசிலரெனினும் உறவாடலாம் அவர்களுடன் எவரெனக்கண்டு

ஜெயம்
21-06-2024

Nada Mohan
Author: Nada Mohan