11
May
பாசத்தின் பகிர்வினிலே
பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன
நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே
வாசமுல்லை விரிந்தது...
08
May
பாசப்பகிர்வினிலே………!!
Shanthini Thuraiyarangan
பாசம் வைத்து
பயபக்தியாக வளர்த்து
பார்போற்றி வாழ
தன்வாழ்வை
பணயம் வைக்கும்
உருவே எம் அன்னை
எத்தனை பிள்ளைகளானாலும்
அத்தனை...
08
May
பாசப்பகிர்வினிலே……58
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
08-05-2025
மனசுக்குள் தேனாய் ஒரு பாசம்
மௌனத்தின் நிழலான நேசம்
மனையாளும் அதிபதியும்...
ஜெயம் தங்கராஜா
ச.சி.ச
வலி
வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள்
வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள்
வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான்
வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன்
கேள்விக்குறியாக உள்ள கைவிடப்பட்டோரின் எதிர்காலம்
மூழ்கும் கப்பலென அந்தரித்த கோலம்
அனாதைகளாக இவரை யார்தான் படைத்தார்
வினாவிது விடையிருந்தால் அறிந்தவரும் யார்யார்
எளியவரை விடாமல் விரட்டுகின்ற வறுமை
வழியின்றி உதவியின்றி வாடுவதும் கொடுமை
மேல்தட்டு கீழ்த்தட்டென ஆக்கப்பட்ட உலகம்
பாழ்பட்ட வாழ்வினரின் துன்பமெப்போ விலகும்
ஒருவேளை உணவுக்காக ஒருபக்கம் போராட்டம்
அருந்தியுண்டு களிப்பவர்கள் மறுபக்கம் கொண்டாட்டம்
துயரங்களை சுமந்துகொண்டு நகருகின்ற ஒருசாரார்
உயரங்களில் இருந்துகொண்டு ஈயாதோரையும் பாரீர்
ஜெயம்
09-09-2024

Author: Nada Mohan
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
12
May
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
13-05-2025
அன்னைக்கு நிகருண்டோ
அவனியிலே.…
வண்ணப் பெண்ணவளே
வாஞ்சையோடு எமை அணைத்து
சின்னக் கதை பேசி
சீராகப்...
08
May
அன்னை
செல்வி நித்தியானந்தன்
கருவறையில் எமைச்சுமந்து
கண்விழித்து உயிர்காத்து
கருணையில் தனிச்சிறந்து
களிப்பாய் வதனமேத்து
உதிரத்தால் உறவுசேர்த்து
உயிர்கொடுத்த உத்தமியே
உறவுகள் பலஇணைந்து
உள்ளூர...