பாசத்தின் பகிர்வினிலே

பாசத்தின் பகிர்வினிலே பாசத்தின் பரிவினிலே பனியாய் உறைந்தேன நேசத்தின் ஊற்றினிலே நெகிழ்ந்து நின்றேனே வாசமுல்லை விரிந்தது...

Continue reading

பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

ஜெயம் தங்கராஜா

ச.சி.ச

வலி

வருங்காலத்தை எண்ணியெண்ணி அனுதின ஏக்கங்கள்
வருந்துயரில் உளத்திலும் உடலிலும் தாக்கங்கள்
வலிகள் அனைவரது வாழ்க்கையிலும் உண்டுதான்
வழிகள் அடைபடவே பலரிங்கே கலங்குவதுமேன்

கேள்விக்குறியாக உள்ள கைவிடப்பட்டோரின் எதிர்காலம்
மூழ்கும் கப்பலென அந்தரித்த கோலம்
அனாதைகளாக இவரை யார்தான் படைத்தார்
வினாவிது விடையிருந்தால் அறிந்தவரும் யார்யார்

எளியவரை விடாமல் விரட்டுகின்ற வறுமை
வழியின்றி உதவியின்றி வாடுவதும் கொடுமை
மேல்தட்டு கீழ்த்தட்டென ஆக்கப்பட்ட உலகம்
பாழ்பட்ட வாழ்வினரின் துன்பமெப்போ விலகும்

ஒருவேளை உணவுக்காக ஒருபக்கம் போராட்டம்
அருந்தியுண்டு களிப்பவர்கள் மறுபக்கம் கொண்டாட்டம்
துயரங்களை சுமந்துகொண்டு நகருகின்ற ஒருசாரார்
உயரங்களில் இருந்துகொண்டு ஈயாதோரையும் பாரீர்

ஜெயம்
09-09-2024

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading