“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சலவை

அரைத்ததையே அரைத்து அரைகுறையான வாழ்க்கை
உரைத்ததையே உரைத்து உருப்படாத உதடுகள்
குரைத்துவிடும் நாய்போல கடிக்காமல் குரைப்பு
கரைந்துகொண்டே வழியறியாதே நாட்கள் விரைவு

மனதிலிங்கே உறுதியில்லை வாயாலே வடைசுடுவது
தனக்கென்றாலே சுளகும் படக்கு படக்கென்றுது
வனத்தில் வசித்திடும் விலங்குகளாய் பிழைப்பு
இனத்தின் தன்மையில் ஒரறிவு இழப்பு

யாரையிங்கு குறைகூறி யாரையிங்கு விடுவது
தேரை இழுத்து வீதியில் விடுவதா
பேரை கெடுத்திடும் சிறுமையாலென்ன இலாபம்
ஊரை பேய்க்காட்டி வாழ்வது பாவம்

இன்னொருவன் மூளையை செய்வதில் சலவை
என்னவொரு உணர்ச்சி துஷ்பிரயோக கலவை
தன்னலம் கொண்டவர்களின் கருத்துக்களாலான வசியம்
வன்மங்களை விதைப்பதிலே இவருக்கென்ன அவசியம்

ஜெயம்
27-10-2024

Nada Mohan
Author: Nada Mohan