” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

சலவை

அரைத்ததையே அரைத்து அரைகுறையான வாழ்க்கை
உரைத்ததையே உரைத்து உருப்படாத உதடுகள்
குரைத்துவிடும் நாய்போல கடிக்காமல் குரைப்பு
கரைந்துகொண்டே வழியறியாதே நாட்கள் விரைவு

மனதிலிங்கே உறுதியில்லை வாயாலே வடைசுடுவது
தனக்கென்றாலே சுளகும் படக்கு படக்கென்றுது
வனத்தில் வசித்திடும் விலங்குகளாய் பிழைப்பு
இனத்தின் தன்மையில் ஒரறிவு இழப்பு

யாரையிங்கு குறைகூறி யாரையிங்கு விடுவது
தேரை இழுத்து வீதியில் விடுவதா
பேரை கெடுத்திடும் சிறுமையாலென்ன இலாபம்
ஊரை பேய்க்காட்டி வாழ்வது பாவம்

இன்னொருவன் மூளையை செய்வதில் சலவை
என்னவொரு உணர்ச்சி துஷ்பிரயோக கலவை
தன்னலம் கொண்டவர்களின் கருத்துக்களாலான வசியம்
வன்மங்களை விதைப்பதிலே இவருக்கென்ன அவசியம்

ஜெயம்
27-10-2024

Nada Mohan
Author: Nada Mohan