ஜெயம் தங்கராஜா

சசிச

சலவை

அரைத்ததையே அரைத்து அரைகுறையான வாழ்க்கை
உரைத்ததையே உரைத்து உருப்படாத உதடுகள்
குரைத்துவிடும் நாய்போல கடிக்காமல் குரைப்பு
கரைந்துகொண்டே வழியறியாதே நாட்கள் விரைவு

மனதிலிங்கே உறுதியில்லை வாயாலே வடைசுடுவது
தனக்கென்றாலே சுளகும் படக்கு படக்கென்றுது
வனத்தில் வசித்திடும் விலங்குகளாய் பிழைப்பு
இனத்தின் தன்மையில் ஒரறிவு இழப்பு

யாரையிங்கு குறைகூறி யாரையிங்கு விடுவது
தேரை இழுத்து வீதியில் விடுவதா
பேரை கெடுத்திடும் சிறுமையாலென்ன இலாபம்
ஊரை பேய்க்காட்டி வாழ்வது பாவம்

இன்னொருவன் மூளையை செய்வதில் சலவை
என்னவொரு உணர்ச்சி துஷ்பிரயோக கலவை
தன்னலம் கொண்டவர்களின் கருத்துக்களாலான வசியம்
வன்மங்களை விதைப்பதிலே இவருக்கென்ன அவசியம்

ஜெயம்
27-10-2024

Nada Mohan
Author: Nada Mohan

    சிவரூபன் சர்வேஸ்வரி செந்தூரப்பூவே ஃஃஃஃஃஃஃஃஃஃஃ செந்தூரப்பூவே செங்காந்தள் விழியே வருவாயே// மந்தாரம் கொட்டும் மாசில்லாத வீணையிலே// ஒய்யாரமாக ...

    Continue reading