“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

மறக்கமுடியுமா மே 18

ராணி சம்பந்தர் முள்ளிவாய்க்கால் முனகலிலே இன்னும் எம் காதினில் ஒலிக்க மூச்சுப் பேச்சின்றி உயிருடனே மூடிய கிடங்கிலே அடங்கியதே துள்ளிக்...

Continue reading

ஜெயம் தங்கராஜா

சசிச

போரில்லா பார் வேண்டும்

புலரும் அந்தக்காலை நல்ல விடியலுக்காகவா
நிலத்தில் பேரழிவை உண்டுபண்னும் வெடிகளுக்காகவா
உலகமே இன்று பூண்டுள்ளது போர்க்கோலம்
கலகமே முடிவென்று நம்பிக்கொள்ளும் காலம்

புத்தி நாசமடைந்த கோளைகளின் பயங்கரவாதம்
பித்துப்பிடித்தவரால் உயிர்களுக்கும் உடமைகளுக்கும் சேதம்
சத்தியமாய் கூறுகின்றேன் மிருக வெறியாட்டம்
கத்தினாலும் குழறினாலும் காட்டுமிரான்டியாய் காட்டம்

துப்பாக்கி குண்டுகளால் விபரீத விளையாட்டு
அப்பாவி மக்களது உயிருடன் விளையாட்டு
தப்பு செய்துகொண்டு சட்டங்களை மீறுவார்கள்
தப்பித்துக்கொள்ள தகுந்த காரணமும் கூறுவார்கள்

பிணந்திண்ணி கழுகாக மாறிய மனிதர்
இனமென்றும் மதமென்றும் இழந்தார்கள் மனிதம்
தனக்கு தனக்கென்பதாலே வந்ததிந்த அழிவு
மனங்கள் ஒன்றுபடின் ஏனிந்த கண்ணீர்ப்பொழிவு

ஜெயம்
12-11-2024

Nada Mohan
Author: Nada Mohan