தங்கசாமி தவக்குமார்

வியாழன் கவி :
“பொங்கும் உளமே தங்கும் தையே”

விதைத்தவை பயனுற
விளைச்சலாய் பெருகிட
விருப்போடு உறவுகள்
விருந்தோம்பி மகிழ்ந்தட
வளம் தரும் தையே வருக

உழைத்திடும் உழவர்
உளமது பொலிவுட பொங்கிட
மாசிலா மலர்வு தரணியில் தங்கிட
தையே மகளே வருக
வானம் பார்க்கும் பூமியிலே
பூவும் பிஞ்சும் எழிலோடு விளைந்திட எட்டுத் திக்கும்
காலம் அறிந்து கருணை பொழிய
தையே வருக வருக
நன்றி

Nada Mohan
Author: Nada Mohan

    வசந்தா ஜெகதீசன் கல்லறைகள் திறக்கும்..... விடுதலை வேட்கையும் வீரத்தின் உணர்வும் ஓன்றித்த போர்க்காலம் ஓயாத அலை போல அவலமும் அழிவும்...

    Continue reading