பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

தாயுமானவர்

ஜெயம்

கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள்
அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு
அவர் சொற்களால் தீர்ந்திடும் வலிகள்
அவரைப்போல் எவர் காட்டுவார் நல்வழிகள்

அழத் தெரியாத அற்புதப் பிறப்பு
அளவில்லா பாசத்தை அடக்கிவைப்பதவர் சிறப்பு
கடமைகளை தவறாது கடைப்பிடிக்கும் கடமைவீரன்
உடைமையென சொந்தங்களை எண்ணிடும் சொந்தக்காரன்

கருவறையில் சுமக்கவில்லை ஆயுளுக்கும் சுமப்பவர்
புரியாமல் இருந்துகொண்டு பெரிதாக செய்பவர்
ஓயாமல் உதித்துவிடும் மண்ணுலக ஆதவன்
ஆயிரம் உறவிருப்பார் அவரன்றோ நாயகன்

வாழ்நாளெல்லாம் போராடும் வாழ்க்கை போராளி
தாழ்ந்துவிடாதே குடும்பத்தை தாங்கும் சுமைதாங்கி
மார்பிலும் தோளிலும் சுமந்த தாயுமானவர்
தேரேற்றி கொண்டாடப்பட வேண்டிய
இறையுமானவர்

04-06-2025

Nada Mohan
Author: Nada Mohan