கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

தாயுமானவர்

ஜெயம்

கண்ணுக்கு தெரிந்தும் புரிந்தறியாக் கடவுள்
அன்பை உழைப்பால் காட்டிடும் உறவு
அவர் சொற்களால் தீர்ந்திடும் வலிகள்
அவரைப்போல் எவர் காட்டுவார் நல்வழிகள்

அழத் தெரியாத அற்புதப் பிறப்பு
அளவில்லா பாசத்தை அடக்கிவைப்பதவர் சிறப்பு
கடமைகளை தவறாது கடைப்பிடிக்கும் கடமைவீரன்
உடைமையென சொந்தங்களை எண்ணிடும் சொந்தக்காரன்

கருவறையில் சுமக்கவில்லை ஆயுளுக்கும் சுமப்பவர்
புரியாமல் இருந்துகொண்டு பெரிதாக செய்பவர்
ஓயாமல் உதித்துவிடும் மண்ணுலக ஆதவன்
ஆயிரம் உறவிருப்பார் அவரன்றோ நாயகன்

வாழ்நாளெல்லாம் போராடும் வாழ்க்கை போராளி
தாழ்ந்துவிடாதே குடும்பத்தை தாங்கும் சுமைதாங்கி
மார்பிலும் தோளிலும் சுமந்த தாயுமானவர்
தேரேற்றி கொண்டாடப்பட வேண்டிய
இறையுமானவர்

04-06-2025

Nada Mohan
Author: Nada Mohan

செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

Continue reading