பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

தியாக தீபம் திலீபன்

சக்தி சிறினிசங்கர்

ஊரெழு மண்ணில் உதித்தவன் உலகத்தில்
பேரெழுதிச் சென்றவன் பெருந்தியாகம் செய்தே
பாரும் வியந்திடப் பார்த்தீபன் பசித்திருந்தான்
சோராது சென்றவன் சோர்ந்து போகிட
ஊரும் உலகமும் உணர்விலே உறைந்திட ஈராறு நாட்கள்
இருந்தான் இன்றும்
தீராத சோகமாய்த் தீலீபனின் மரணம்!
தன் சுகம் மறந்து தன் இன சுமை சுமந்தான்
வாழ்வினைத் துச்சமென எண்ணி
அச்சமின்றித் தாயகமண் மீட்க
ஐந்தம்சக் கோரிக்கை முன் வைத்தான்
உயிர் உருக உருக மெழுகுவர்த்தியானான்
ஊரெழு அன்னையின் தவப்புதல்வன்
அவன் கனவுகள் நனவாகும்வரை
பசித்திருக்கிறான் இன்றும்!

நன்றி வணக்கம்!

ஈராறு நாடாகள்

Nada Mohan
Author: Nada Mohan