கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

திருமதி.அபிராமி கவிதாசன்.

29.11.2022
சந்தம் சிந்தும் சந்திப்பு வாரம் – 202

“நினைவு நாள் “
மகளே மடிசுமந்து வார்த்தஅன்னை
மரண தீபம்ஏற்ற வந்தேன்
தகனம் கண்ட தருணம் எண்ணி
தணலில் விழுந்த புழுவாய் நின்றேன்

உன்முகம் எந்தன்அகம் முன்னே
வந்து வந்து போகுதம்மா
மரணித்த ஞாபகத்தை
தந்திவந்து சொல்லுதம்மா

பகல் கனவாய் போனதம்மா
பாவி கண்ட கனவெல்லாம்
பால்வார்த்த நெஞ்சமிங்கு
பற்றியே எரியுதம்மா

தாயக மண்ணிற்கு
தந்தேனுன்னை இரையாக…
தானம் ஈந்தகையிரண்டும்
தவிக்குதம்மா தனிமையிலே

கல்லறையை கண்டுகண்டு
கண்ணீராய் குருதியோட்டம்
புல்லரித்து தேகமெங்கும்
புண்பட்டு கொதிக்குதம்மா

பூவான உன்முகம்
போரினில் கருகக்கண்டு
பூவனமும் வாடியதே
பூவேநீ உதிர்க்கையிலே

அகல்தீபம் ஏற்றியே
ஆண்டுதோறும் அழுகின்றேன்
என்முகம்முன்னே நீவந்து
என்முத்துக் கண்ணீர்துடைப்பாயோ !

நன்றி . பாவை அண்ணா🙏

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading