திருமதி .அபிராமி கவிதாசன்.

28.03.2023
சந்தம் சிந்தும் சந்திப்பு மாதம்
116…
தலைப்பு !

“நீர்க்குமிழி”
கண்ணாடி பளபளப்பில்
கண்சிமிட்டும் நீர்க்குமிழி
கண்ணிமைக்கும் நொடியினில் கரையுமுன்
காட்சியே //

வண்ண வண்ண குமிழிகள் வானவில்
நிறத்தினில்
வட்டவடிவில் வலம்வரும் விளையாடி காற்றினில் //

எண்ணத்தில் உடையப் போகும் ஏக்கமும் இல்லாது
எண்ணற்ற குமிழிகள்
எழிழுடன் தோன்றுமே //

மண்ணை தொட்டதும் மரணம் என்பதை
மனமும் அறியும்
மகிழ்ந்து மடியும் //

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

    Continue reading