கனவுப் பயணம்

சக்தி சிறினிசங்கர் விழி மூடித் தூங்குகையில்பயணிக்கின்றேன் தொலைதூரம் வழிநெடுக வயல்வெளிகள் வயல்வெளி யாவும் பச்சைப் பசேலென விரிந்து கண்களைக்...

Continue reading

கனவுப்பயணம்……

ரஜனி அன்ரன் (B.A) ....கனவுப்பயணம்..... 07.05.2026 கற்பனைச் சிறகைவிரித்து கனவுகளில் மிதந்து எழுத்துக்களின் தோப்பில் தொலைந்து எண்ணங்களின்...

Continue reading

திருமதி.சக.தெய்வேந்திரமூர்த்தி

தமிழனே!
“”””””””

ஏறுபோல் இலங்கிடும் என்னரும் தமிழனே!
எங்கணும் எம்மினம் ஏங்கிடல் வேண்டுமா?
வீறுகொண் டெழுந்திடு வீச்சிலுன் தமிழெள
வீரியம் தமிழென வெல்வதுன் கடனடா
ஆறுபோன் றொழுகியே அற்புதம் நடத்தடா
ஆற்றலை அடக்கியே அடங்கிடல் துன்பமாம்
கூறுவாய் தமிழனின் குறைகளை நீக்கவே
குலவிடும் பிறமொழிக் கலப்பினைத் தடுத்திடு!

தூறுமா மழையெனத் தூவிடும் தமிழ்மகள்
தூய்மையாம் சுதந்திரக் காற்றிலே வாழுவாள்
மாறுமோ தமிழவள் மாசிலா மாண்புமே
மானமே பெரிதெனும் மறவனே தமிழ்மகன்
ஆறுமோ அடங்குமோ அன்னியர் அழிவலை
அதுவரை பொறுத்துநீ அடங்கிடல் இயலுமா?பேறுதான் தமிழருள் பேதமில் வாழ்வடா
பெறுகவே ஒற்றுமை பெருந்தமிழ் நாதமாய்!

தேறுவாய் தமிழனே தேடிடும் தமிழினால்
தேகமே அழியினும் திசைதிசை செல்லினும்
நாறுமெம் தமிழ்மணம் நாற்றிசை பரப்பிடு
நாநிலம் போற்றிடும் நற்றமிழ் நூல்வழி
மாறுமெம் கலைகளும் மறையுபண் பாடெலாம்
மாநிலம் போற்றவே மாற்றுயிர் தந்திடு
சேறுதாம் வாழ்வெனின் செம்மையாய்ப் பூக்குதே!
செய்தியைக் கண்டுநீ செய்கையில்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் வாயார வாழ்த்துகிறேன் மூன்று நூறுடன் ஜம்பதின் முகிழ்வு முத்தப்பாய் கிடைத்த அரியதொரு நிகழ்வு சந்தத்துடன் கவியும் சந்தோச...

    Continue reading