புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காக
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.

தலைப்பு : *காணி*

கால்பதித்த காணி உன்னை கடந்து வந்து விட்டேன் அன்று

நூல்பதிக்க எண்ணி நானும் நுழைந்து கொண்டு விட்டேன் இன்று

ஓடி விளையாடி நாங்கள்
ஒழித்து விளையாடி
கூடிகுலாவி நின்றே _ நாங்கள் கூடி மகிழ்ந்த காணி
தென்னங் கீற்றின் ஊடே தெரி நிலவொளி தனிலே
பன்னப்பாய் விரித்து வைத்து
பலகதைகள் பேசி
அன்னக்கவளம் உண்டே நாங்கள்
ஆறிக் கிடந்த காணி

முற்றத்தைப் பெருக்கி நன்றாய் முழுதும் சுத்தமாக்கி
அற்றைப் பொழுதில் எங்கள் ஆச்சி வாழ்ந்த காணி
கற்பகத் தருவோ என்தன் கண்ணில் மறையவில்லையடி
நிற்கும் தென்னைகளோ என்தன்
நினைவில் ஒழியவில்லையடி
எப்போ வருவேன் என்று
ஏங்குதடி என் மனது
அப்போ இருப்பாயோ என்று
எழுகுதடி ஐயம் இன்று.

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading