திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் சந்திப்புக்காய்
சிவமணி புவனேஸ்வரன் சுவிசில் இருந்து.

*விடுமுறைக் களிப்பு.*

சீல வாழ்வு சிந்தையில் தேடி
காலங் கடந்து தேடிய பயணம்
ஞாலம் எல்லாம் நமதாய்ப் போக
பாலமானது பலவழிப் பாதை

ஓட்டமும் நடையும் ஒருதரம் ஓய
வீட்டை மறந்து விண் வரை பறந்து
கூட்டமாய் உறவொடு
கூடி மகிழ்ந்து
ஊட்ட உணவினில்
உள்ளம் மகிழ்ந்து

சின்ன ஆசைகள் சிலநாள் அடைவினில்
இன்னல் மறந்த இன்பப் பொழுதுகள்
பின்னும் ஈழம் செல்லத் துடிக்கும்
என்மனம் இன்னும்
தாய்மடி தேடும் .

Nada Mohan
Author: Nada Mohan

    ராணி சம்பந்தர் அன்பில் உயர்ந்த பிறப்பிடம் ஆதரவில் பதிந்த சிறப்பிடம் இனிமை உதித்த தரிப்பிடம் ஈரேழு ஜென்மும் போற்றும் உலகத்தோரின்...

    Continue reading

    செல்வி நித்தியானந்தன் அன்னை தரணியில் தாய்க்கு நிகர்யாதும் உண்டோ தற்பெருமை இல்லா காத்திட்ட தெய்வம் அழகுபெற்ற வதனம் பழகுவதும் உறவாய் அன்பிலே இருப்பிடம் பண்பிலே மேலானவர் எட்டுமகவுகள்...

    Continue reading