10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
****இலைதுளிர்காலம் ****
மெல்லிய விடியலில் மேதினி ஒளிர்வில்
சில்லெனும் காற்றில் சிலிர்க்கும் தளிரிடை,
அல்லல் நீங்கிய அதிகாலைப் நடையிடை
சொல்லியம் காணாச் சுகங்கள் தந்ததே
மலையிடை தாண்டி மகிழ்வாய்த் தவழும்
சலசல அருவி சந்தம் சேர்த்திட
சிறகுகள் விரிக்கும் சின்னக் குருவிகள்
பறக்கும் பொழுதில் பண்ணிசை பாடின
உதயம் காணும் உதய சூரியன்
இதயம் ஏற்க இலங்கும் பொழுதிடை
நிறநிற பூக்கள் நிறைந்து கிளையிடை
நறைகளைத் தாங்கி நறுமணம் தந்தன
வண்ணத்துப் பூச்சிகள் வட்டமிட வசந்தம்
எண்ணத்தில் கவி களை ஏற்றிடச் சொன்னன
மண்ணிடை மக்கள் மனதினில் இயற்கை
கண்ணினில் இன்பம் காட்சிகள் ஆகுதே

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...