பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

திருமதி சிவமணி புவனேஸ்வரன்

சந்தம் சிந்தும் கவிக்காக
திருமதி சிவமணி புவனேஸ்வரன்
சுவிஸ் இல் இருந்து.
தலைப்பு :
*ஊக்கி*
உயர்வே வேண்டும் உலகில் என்றே
உத்தம மாந்தர் உலகில் தோன்றி
ஆக்கம் பெருகும் ஊக்கம் பலவும்
அளிக்கும் நல்ல பெரியார் ஆகி
நோக்கம் ஒன்றே குறியாய் கொண்டே
நோன்பு பலவும் தமக்கே ஆக
அயராப் பணியை அனுதினம் ஆற்றி
அன்பால் உலகை அழகாய்க் காப்பார்.

கயவர் என்றே ஐயோ பாராய்
காசினி உலவும் களங்க மனிதர்
ஆக்கம் யாவும் அழிவே ஆக
கூக்குரல் ஒன்றே குவலயம் காண
ஊக்க மருந்தை
உலகுக் அளித்தே
உயிரை அழிக்க
உலையே வைப்பார்

ஊக்கம் பலவாய் உலகில் உண்டு
உய்து அறிந்தால்
உயர்வும் உண்டு

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading