பதியமிடும் எழுத்தாணிகள்…

வசந்தா ஜெகதீசன் இருபத்தியொன்பது ஆண்டின் தொடர்ச்சி ஈடிணையற்ற படைப்புகளின் வளர்ச்சி இளையோர்கள் நோக்கிய புரட்சி எழுத்தாளர் மாதமாய்...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்

நகுலா சிவநாதன் பதியமிடும் எழுத்தாணிகள் எழுத்தாலே பதியமிட்டு எண்ணத்தால் கோலமிட்டு எழுகின்ற வாழ்க்கை எழில்மயமாய் அமைந்திடும் எழுத்தாளர்வாரம் எடுக்கின்ற பதியம் தொடுக்கின்ற மாலைகளால் தொடரட்டும் என்றும் விரிந்திட்ட...

Continue reading

பதியமிடும் எழுத்தாணிகள்…..

ரஜனி அன்ரன் ((B.A) பதியமிடும் எழுத்தாணிகள் 04.06.2026 ஒற்றைவரியில் உலகத்தைத் திருப்பும் ஏற்றம்மிக்க ஆயுதம் எழுத்தாணி எழுத்தின்...

Continue reading

திருமதி செ.தெய்வேதிரமூர்த்தி

வணக்கம் அண்ணா.
விருப்பத் தலைப்பு:-
வெய்யோனே சீற்றமும் ஏனோ?…

அறுசீர் விருத்தம்

சீர் வரையறை..

விளம் விளம் காய்
விளம் விளம் காய்..

சூரியோய் கொட்டிநீ சூழ்நெருப்பைச்
சோகமும் தந்திட எண்ணியதேன்
பாரிடை மாந்தருன் பயிலரங்கா
பண்பினை விற்றதன் பாதகமா
மாரியள் செய்தநற் கொடையனைத்தும்
மண்மகள் வீட்டினுள் வைத்தனளே
வேரிடை ஓடியென் தேடுகிறாய்
வெம்பியே பூந்தளிர் வாடுதுபார்

காரிருள் ஆயினும் கனலகற்றாக்
காவியச் சாதனை போற்றுகின்றோம்
வாரியே தந்தெமை வறுத்தெடுக்க
வல்லமை தந்ததார் சூரியரே
பாரியைப் போலொரு எண்ணமிதோ
பார்த்திடப் பல்கதிர் பாய்ச்சுகின்றீர்
கூரிய வெம்மைகண் டோடுகின்றார்
கூட்டினுள் குஞ்சுகள் பாவமன்றோ!

திருமதி
செ.தெய்வேந்திரமூர்த்தி.
பரந்தன்.
இலங்கை.

Nada Mohan
Author: Nada Mohan