தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம் 🙏

வியாழன் கவி — 91

தலைப்பு — உறவை பேணுவீர்

உலகெங்கும் உள்ளனர் உறவினர் என்றெண்ணி
நலமான பலமான நமக்குரிய நல்லவற்றை
விலக்கிவிட்டு விலகவிட்டு வாழ நினைக்காது
வளமாக வாழ்விக்கும் அன்பை பேணுவீர் !

பொன்னகையும் போலிப் பொருட்களும் பொருளல்ல
அன்பும் புன்னகையும் அளவிடமுடியா சொத்துக்கள்
என்றும் இவற்றை வோண்டுவோற்கு வழங்கி
மண்ணில் உறவை பாசத்தை வளர்த்திடுவீர்!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
30/06/2022

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading