திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 96

தலைப்பு — தைமகளே

தலைமகளே தைமகளே தரணியாள வருக
தலை நிமிர்ந்து நாம்வாழ வருக
தலைவன் சொல்லும் பாதையிலே வருக
தலைமைகளை சரி படுத்த வருக

தை வந்தாள் வழி பிறக்குமா
பேதைகள் வாழ்வில் வலி நீங்குமா
கோதைகளாய் வாழ்ந்த மனங்கள் மாறுமா
மேதைகளாய் இவர்கள் வாழ்வை மாற்றுவாயா

ஆறுதல் வார்த்தை சொல்ல வருவாயா
தேறுதல் பலம் சேர்த்து தருவாயா
மாறுதல் மலர மனங்களை மாற்றுவாயா
கூறுகிறேன் நடந்தவற்றை தைமகளே காப்பாற்றுவாயா?!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/01/2023

Nada Mohan
Author: Nada Mohan

    சந்த கவி இலக்கம்_215 சிவாஜினி சிறிதரன் "நல்லுறவு" பொறுமை சகிப்பு தன்மை இரண்டும் தெய்வீக குணங்கள் இதற்கு எஞ்சிய நற்குணம் ஏது...

    Continue reading

    ராணி சம்பந்தர் நாலும் சேர்க்குமே நல்லுறவு அல்லும் பகலுமே பாடுபடவே கல்லும் கனியாகும் கூட்டுறவு சொல்லும் செயலும் பல்லுறுதி கொல்லும்...

    Continue reading

    ஜெயம் இன்பத்திலும் துன்பத்திலும் பக்கபலமாக இருப்பார் ஒன்றுக்கொண்று நம்பிக்கையின் உறவேனவே இருப்பார் எண்ணங்களுக்கும் உணர்வுகளுக்கும் மரியாதை...

    Continue reading