தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 96

தலைப்பு — தைமகளே

தலைமகளே தைமகளே தரணியாள வருக
தலை நிமிர்ந்து நாம்வாழ வருக
தலைவன் சொல்லும் பாதையிலே வருக
தலைமைகளை சரி படுத்த வருக

தை வந்தாள் வழி பிறக்குமா
பேதைகள் வாழ்வில் வலி நீங்குமா
கோதைகளாய் வாழ்ந்த மனங்கள் மாறுமா
மேதைகளாய் இவர்கள் வாழ்வை மாற்றுவாயா

ஆறுதல் வார்த்தை சொல்ல வருவாயா
தேறுதல் பலம் சேர்த்து தருவாயா
மாறுதல் மலர மனங்களை மாற்றுவாயா
கூறுகிறேன் நடந்தவற்றை தைமகளே காப்பாற்றுவாயா?!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/01/2023

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading