” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்

அனைவருக்கும் வணக்கம்🙏
வியாழன் கவி – 96

தலைப்பு — தைமகளே

தலைமகளே தைமகளே தரணியாள வருக
தலை நிமிர்ந்து நாம்வாழ வருக
தலைவன் சொல்லும் பாதையிலே வருக
தலைமைகளை சரி படுத்த வருக

தை வந்தாள் வழி பிறக்குமா
பேதைகள் வாழ்வில் வலி நீங்குமா
கோதைகளாய் வாழ்ந்த மனங்கள் மாறுமா
மேதைகளாய் இவர்கள் வாழ்வை மாற்றுவாயா

ஆறுதல் வார்த்தை சொல்ல வருவாயா
தேறுதல் பலம் சேர்த்து தருவாயா
மாறுதல் மலர மனங்களை மாற்றுவாயா
கூறுகிறேன் நடந்தவற்றை தைமகளே காப்பாற்றுவாயா?!

நன்றி வணக்கம் 🙏

திருமதி. பத்மலோஜினி. திருச்செந்தூர்ச்செல்வன்
London
26/01/2023

Nada Mohan
Author: Nada Mohan