10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
திறனின் மேன்மை தீட்டும் குழந்தைகளே…!
“திறனின் மேன்மை” தீட்டும்
குழந்தைகளே…!
வியாழன் கவி 1967..
மீட்டும் வீணையென
மிரளாத விழிகளென
உங்கள் திறன்கள்
உலகே வியக்கின்றன
மன்றம் வந்த குன்றுகள்
மகிமை குன்றா ஒளிர்வுகள்..
மகிழ்வு சிந்தும் மக்காள்
உங்கள் பிறப்பே சிறப்பாம்
பொன்மாலைப் பொழுதுகள்
கன்னல் மொழியால் ஆழும்
ஆளுமைப் பெட்டகங்களே
அன்பினால் உமை வாழ்த்தி..
திறனின் மேன்மை தீட்டு
தீராத தீந்தமிழ் மீட்டு
திக்குகள் எங்கும் முழங்கு
திகழட்டும் உம் புகழ் ஓங்கு..
தீட்டும் திறமைகள் கண்டு
தினமும் நம்மை நாம் மீட்டும்
வீணா ஒலியில் விளங்கும்
விடியல்களே உம் புகழ்..
வழி தந்த பாமுகம் ஏற்று
வழிப்படும் உளங்கள் நாற்று
உழிகொண்டு செதுக்கிய இறை
விழிகள் வியக்க நீ பறை…!
சிவதர்சனி இராகவன்
25/4/2024

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...