தீதும் நன்றும்

நகுலா சிவநாதன்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் திடமுடனே
தீங்கே இல்லா வாழ்வினிலே
ஓதும் மறையும் ஒளிபோலே
உளமே ஏங்கும் நனிநன்றே
மோதும் வாழ்வில் துன்பங்கள்
மோதி வந்து சென்றாலும்
காதும் கண்ணும் வைத்திங்கும்
காலம் முழுக்கப் பேசாதீர்

ஞாலம் போற்றும் வாழ்வினிலே
நன்மை செய்து வாழ்வோமே
காலம் போற்றும் நற்பெருமை
கனிந்து வாழ்வில் பெருகிடவே
பாலம் போடும் பண்பாடு
படந்து வாழ்வில் சேர்ந்திங்கு
தூலம் போடும் பொற்கதிராய்
துணிவை ஏற்றி துலங்கிடுக!

நகுலா சிவநாதன் 1763

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading