” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

தீதும் நன்றும்

நகுலா சிவநாதன்

தீதும் நன்றும்

தீதும் நன்றும் திடமுடனே
தீங்கே இல்லா வாழ்வினிலே
ஓதும் மறையும் ஒளிபோலே
உளமே ஏங்கும் நனிநன்றே
மோதும் வாழ்வில் துன்பங்கள்
மோதி வந்து சென்றாலும்
காதும் கண்ணும் வைத்திங்கும்
காலம் முழுக்கப் பேசாதீர்

ஞாலம் போற்றும் வாழ்வினிலே
நன்மை செய்து வாழ்வோமே
காலம் போற்றும் நற்பெருமை
கனிந்து வாழ்வில் பெருகிடவே
பாலம் போடும் பண்பாடு
படந்து வாழ்வில் சேர்ந்திங்கு
தூலம் போடும் பொற்கதிராய்
துணிவை ஏற்றி துலங்கிடுக!

நகுலா சிவநாதன் 1763

Nada Mohan
Author: Nada Mohan