நட்பென்றாலே……..

ரஜனி அன்ரன் (B.A) நட்பென்றாலே.... 30.07.2026 எங்கிருந்தோ வந்த சொந்தம் எந்தஎதிர்பார்ப்பும் இல்லாப் பந்தம் இரத்தபந்தம் இல்லாஉறவு இருளில்...

Continue reading

தொழிலாள சிறுவர்

தண்ணீருக்கு ஏங்கி
தவ்விப்போர் கலங்கி
கண்ணீர் வடிப்பார்
கவலையில் நாவரண்டு
உண்ணீர் என்று உபசரிக்க உறவில்லா
எண்ணற்ற சிறார்கள்
எச்சில் இலை வழித்து
கண்ணீர் கலந்துண்ண
காண்கின்றோம் பாரில்
கண்ணான பிள்ளைகள்
காசாசை பெற்றோரால்
புண்ணாக பிஞ்சு உடல்
பொல்லாதார் வீடுகளில்
எண்ணரிய இன்னல்கள்
எடுபிடி வேலைகளில்
விண்ணே பொருமி
விடுகிறது ஓயாமல்
தண்ணீர் வெள்ளத்தை
கண்ணீராய் தண்ணீரை
கண்டிக்க உலகத்தை.

Nada Mohan
Author: Nada Mohan