கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

தொழிலாள சிறுவர்

தண்ணீருக்கு ஏங்கி
தவ்விப்போர் கலங்கி
கண்ணீர் வடிப்பார்
கவலையில் நாவரண்டு
உண்ணீர் என்று உபசரிக்க உறவில்லா
எண்ணற்ற சிறார்கள்
எச்சில் இலை வழித்து
கண்ணீர் கலந்துண்ண
காண்கின்றோம் பாரில்
கண்ணான பிள்ளைகள்
காசாசை பெற்றோரால்
புண்ணாக பிஞ்சு உடல்
பொல்லாதார் வீடுகளில்
எண்ணரிய இன்னல்கள்
எடுபிடி வேலைகளில்
விண்ணே பொருமி
விடுகிறது ஓயாமல்
தண்ணீர் வெள்ளத்தை
கண்ணீராய் தண்ணீரை
கண்டிக்க உலகத்தை.

Nada Mohan
Author: Nada Mohan