கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலா சிவநாதன்

சிலைகள்
பொன்னாய் மின்னும் சிற்பங்கள்
பொழுதை நிறைக்கும்
நற்சிலைகள்
கண்ணைக் கவரும் வடிவங்கள்
கருணை யளிக்கும் தெய்வங்கள்
எண்ணம் பேசும் எழில்வடிவம்
என்றும் மிளிரும் அழகுநிறம்

நிறங்கள் பலவாய் ஒளிர்ந்தோங்கும்
நீண்ட நாட்கள் அருளாக்கும்
திறன்கள் சேர்ந்து வரமாகும்
திறமை உணர்ந்து வடிவமாகும்
குறைகள் நீக்கும் நம்பிக்கை
கூட அருளும் இறைவாக்கு
கறைகள் மனத்தில் நீக்கிடவே
கனிந்து உருக வைத்திடுமே!!

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan