கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலா சிவநாதன்

தலை சாய்ப்போம்
மனிதம் நிமிர வாழ்ந்தவர்க்காய்

தலைசாய்க்கும் ஒவ்வொரு மணித்துளியும்
நிலமதன் காத்தலையே
நின்று உரைத்து
சொல்லுதே!!

மனிதம் நிமிர
புனிதம் பேண
வாழ்ந்தவர்காய்
வரலாறு உரைக்கும்
காலச்சுவடு!!

தாயக விடுதலையை
நேசமாய்க் கொண்ட
மாவீர மணிகளே!!
தலைசாய்ப்போம்
இன்னுயிரை ஈந்தமைக்காய்

பொன்னான தாய்நாட்டை
பொழுதிலும் காத்த மறவரே
உம்வீரம் கண்டோம்
உணர்விலும் எழுந்தது தாய்நாடே!!

மனிதம் நிமிர
வாழ்ந்தவர்க்காய்
தலைசாய்ப்போம்
வீரமறவர் தியாகத்தை
போற்றுவோம்
நகுலா சிவநாதன் 1700

Nada Mohan
Author: Nada Mohan