கணப்பொழுதில்

கணப்பொழுதில்.. சிவருபன் சர்வேஸ்வரி கணப்பொழுதில் மாறும் மனிதன் கோடி இமைக்கும் நேரத்துக்குள் இரணியர் பலகோடி முடிக்கும் காரியம் தெரியாதவர்...

Continue reading

நகுலா சிவநாதன்

மீளெழும்காலம்

கறைபடிந்த போரின் தாக்கம்
கலகங்களையும் ஏக்கங்களையும்
காவியே வடுக்களாய்த் தந்தது
செய்வறியாது திகைத்து
எழுந்த கணங்கள்
சேதிகள் பலவற்றை
கேள்விகளாக்கின!

இன்னமும் அகதியாய்
இருட்டறைகளுக்குள்
மீளெழும் காலம் எப்போ?
ஏதிலிகளாய் நாடு நாடாய்
அலைவின் தொடர்கதையே!

மீளெழும்காலம் எப்போ?
மிகுதி காலம் வாழ்வா? சாவா?
ஏக்கப் பெருமூச்சு தாக்கமாய்!

மீண்டும் ஒரு அகதி வாழ்வு வேண்டாம்
தீண்டும் எண்ணங்களுடன்
திசை தெரியா வழிகளுக்குள்
திக்குமுக்காடும் வாழ்வு
இனியும் வேண்டாம்!!

நகுலா சிவநாதன்1676

Nada Mohan
Author: Nada Mohan