பாசப்பகிர்வினிலே………!!

Shanthini Thuraiyarangan பாசம் வைத்து பயபக்தியாக வளர்த்து பார்போற்றி வாழ தன்வாழ்வை பணயம் வைக்கும் உருவே எம் அன்னை எத்தனை பிள்ளைகளானாலும் அத்தனை...

Continue reading

பாசப்பகிர்விலே!

நகுலா சிவநாதன் பாசப்பகிர்விலே! சித்திரத்தாயே முத்திரிரை பதித்த முழுமதி பத்திரமாற்றுத் தங்கமாய் பழங்கதை பேசுவாய் படர்கின்ற கொடியே பண்பாட்டுப்பெட்டகம்...

Continue reading

நகுலா சிவநாதன்

வண்ணக் கோடை…..

தெளிந்த வானத் திரையினிலே!
தெளிவாய் முகில்கள் கூட்டமங்கே!
அளிக்கும் வண்ணக் காட்சியிலே
அகமும் கண்டு மகிழ்ந்திடுமே!
துளிக்கும் மழையின் வீழ்ச்சியிலே
துாறல் கண்டு மெய்சிலிர்க்கும்
களிக்கும் மயில்கள் அழகினிலே!
காலம் மெல்லக் கதையெழுதும்

வண்ணக் கோடை வந்திடினும்
வாழ்வே மகிழ்வு கொண்டிடுமே!
எண்ணம் யாவும் மேன்மையிலே!
எழுவோம் புதிய துளிர்ப்பினிலே
கண்ணைப் பறிக்கும் வெய்யிலுமே
கதைகள் வரையும் பலநேரம்
மண்ணை நினைக்கும் காலமுமே!
மனதை வருடும் சிலநேரம்

கோடை கொழுத்தும் வெயிலிலே
கோவில் விழாக்கள் பரபரப்பு
ஆடை அணிகள் அலங்காரம்
அழகு வண்ணப் புடவைகளும்
தோடை அப்பிள் பழங்களும்
தோட்டம் நிறைய பயிர்களும்
சோ‌டை போகா வாழ்விங்கு
சொர்க்கம் காணும் சுகமுமிங்கு!

நகுலா சிவநாதன் 1687

Nada Mohan
Author: Nada Mohan

    அன்னை செல்வி நித்தியானந்தன் கருவறையில் எமைச்சுமந்து கண்விழித்து உயிர்காத்து கருணையில் தனிச்சிறந்து களிப்பாய் வதனமேத்து உதிரத்தால் உறவுசேர்த்து உயிர்கொடுத்த உத்தமியே உறவுகள் பலஇணைந்து உள்ளூர...

    Continue reading

    வசந்தா ஜெகதீசன் பசுமை.. புரட்சியின் புதுமை காட்சியில் பசுமை ஆட்சியில் அருமை அகிலத்தின் மெருகை அழகுறு வசமாய் ஆக்கிடும் எழிலாய் நீக்கிடும் வெறுமைக்கு நிகரேது செப்பு! பூக்களும்...

    Continue reading