” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பேரெழில் நாடு

நகுலா சிவநாதன்
பேரெழில் நாடு

ஆசியக்கண்டத்தின்
அழகியல் தீவே!
ஆயுள் மனிதர் அதிகம் கொண்டநாடே!
பேசும் மொழியும் அழகு
பேரெழில் கொண்ட வளநாடு நீயே

பசுபிக்கடலின் ஓரத்தில்
பார்ப்போர் வியக்கும் வண்ணத்தில்
வீச்சாய் வெப்பம் கொண்டாலும்
மூச்சாய் தென்றல் வரவும்
தழுவும் நாடு யப்பான்தானே!

ஆற்றல் கொண்டநாடாக
அமைதி வண்ண பேரெழிலும்
ஆளுமை மிக்க தொழில்நுட்பமும்
விளங்கும் நாடு
யப்பான் தீவே!!

வளங்கள் உன்னுள் நிறைத்திட்டே
வாஞ்சை வல்லுனர்களை
உருவாக்கி
வளமாய் உறையும் சுந்தரமே
வார்க்கும் சுடராய் வையத்தில்

மூத்தோரை நீயும் மதித்திட்டே
முதுமையைப்போற்றும்
பாரம்பரியம்
என்றும் பெருமை உனக்கேதான்
ஏற்றம் பலவும்
கொண்டாய் வாழ்க !!!

நகுலா சிவநாதன்1818

Nada Mohan
Author: Nada Mohan