இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு

இறைக்கும் பணத்தால் விழிக்குமா உலகு ஃஃஃஃஃஃஃஃஃஃஃஃ இயற்கை தரும் பயனில் எமதுவளம் அயராத கொடைகளை அழிக்கும் மனிதர்கள் மரத்தை...

Continue reading

தொடு வானம்….

தொடு வானம்…
.விண்ணவன் – குமுழமுனை…
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில
உறவுகளைப் போல்

உன்னுள்ளே விந்தைகளோ
எத்தனை அதை காண
என்னுள்ளே
ஆவல்களோ அத்தனை

நீயோ பெருமுயரத்திலிருந்தபோதிலுமே
எனை போன்றே தனிமையின் இருளிலே வாடுகின்றாயே

நீ உன் சோகங்கள்
மறைத்து பிரகாசமாய்
காட்சிதந்தபோதிலுமே
உன் சோகங்கள் எல்லை
கடந்த தருணந்தனிலே
கர்மேகங்களாகி – உன்
கண்ணீரை பொழிகிறாயே

ஆனால் இந்த மக்களோ
உன் கண்ணீரைக் கண்டு
மகிழ்ச்சியில் திளைக்கிறார்களே
இவர்களை நானோ‌
என்ன சோல்லட்டும்..

சுயநலம் பேணும் – இவ்
உலகில் பிறர் நலம்
பேணுவது நீ மட்டுமே

அதனால் தான்
என்னவோ நீ யாரும்
தொடமுடியா உயரத்திலே
தொடுவானமாய் உள்ளாய் போலும்‌‌‌‌‌….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 01-09-2025 வாழ்க்கைப் பயணத்தில் வண்ணமாய் குதூகலம் நொடிப் பொழுதினிலே நெஞ்சினை மகிழ்விக்கும் குயிலின் பாட்டினிலே கடலின்...

Continue reading

செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

Continue reading