தொடு வானம்….

தொடு வானம்…
.விண்ணவன் – குமுழமுனை…
*~***~*
கைதொடும் தூரம் போல்
தேரிந்தாயே அருகில்
வந்தாலோ தொலைதூரம் சென்றாயே சில
உறவுகளைப் போல்

உன்னுள்ளே விந்தைகளோ
எத்தனை அதை காண
என்னுள்ளே
ஆவல்களோ அத்தனை

நீயோ பெருமுயரத்திலிருந்தபோதிலுமே
எனை போன்றே தனிமையின் இருளிலே வாடுகின்றாயே

நீ உன் சோகங்கள்
மறைத்து பிரகாசமாய்
காட்சிதந்தபோதிலுமே
உன் சோகங்கள் எல்லை
கடந்த தருணந்தனிலே
கர்மேகங்களாகி – உன்
கண்ணீரை பொழிகிறாயே

ஆனால் இந்த மக்களோ
உன் கண்ணீரைக் கண்டு
மகிழ்ச்சியில் திளைக்கிறார்களே
இவர்களை நானோ‌
என்ன சோல்லட்டும்..

சுயநலம் பேணும் – இவ்
உலகில் பிறர் நலம்
பேணுவது நீ மட்டுமே

அதனால் தான்
என்னவோ நீ யாரும்
தொடமுடியா உயரத்திலே
தொடுவானமாய் உள்ளாய் போலும்‌‌‌‌‌….
*~***~*
விண்ணவன் – குமுழமுனை…

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading