28
May
ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026
கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும்
காசினியில் யாவர்க்கும் பொதுவே
வாழ்விற்கும் நல்லொளியே
வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு
பொதிகைமலை...
28
May
கரைதலும் புரிதலும்……..
இரா.விஜயகௌரி
கரைகின்ற கணங்களுக்குள்
உறைகின்ற வாழ்வை -நாம்
கணமேனும் சிந்தித்து
நிலைத்தோமா நொடியாய்
விரைகின்ற மணித்துளிகள்
உரசி எழும் செயலால்
கரைகின்ற கணங்களுக்குள்
காத்திரமாய்...
28
May
வாழ்க்கையின் அர்த்தம்
வெறும் நாட்களின் நகர்வா வாழ்க்கை
நினைவுகளை உற்பத்திசெய்யும் உள்ளத்தின் நெடிய பயணம்
ஒவ்வொரு...
தேடும் உறவுகளே…
ரஜனி அன்ரன் (B.A) தேடும் உறவுகளே…. 28.08.2025
தேசத்தின் வரலாற்றில் வலியும்வடுவும் மிகுந்த
சோகத்தின் உச்சக்கட்டம் உறவுகளைத் தேடும்படலம்
பாசவலையாகிக் கடந்தது பதினாறுஆண்டுகள்
தேடும் உறவுகளைத் தேடித்தேடி
தேகமே நடைப்பிணமாகிய வேளை
புதைகுழிக்குள் எச்சங்களும் உறுதியாகிட
தேடும்உறவுகளின் கனவுகளும் கானலானதே !
தேடும் உறவுகளே உம்தேகங்களை
குழிதோண்டிப் புதைத்தாலும்
உண்மைகளை உணர்வுகளை
ஒருபோதும் புதைக்க முடியாதே
ஒருநாள் நீதியின் கதவுகளை தட்டுமே ஆத்மாக்கள்
அப்போது கண்ணீருக்கும் விடைகிடைக்குமே !
எச்சங்கள் மீதமாய் கிடந்தாலும்
மிச்சமாய் துடிக்குது நியாயம் கேட்கும் இதயம்
ஒவ்வொரு எலும்பும் ஒருகதை சொல்லும்
மெளனங்கள் முழங்க உணர்வும் சாட்சியாகுமே !
Author: ரஜனி அன்ரன்
25
May
சிவரூபன் சர்வேஸ்வரி அங்கீகாரம்
ஆளுமை தளும்பாத ஆரம்பம் தேவை
நாளுமே நன்மை நடந்திட வேண்டும்
காலமும் வாழ்த்தவே...
25
May
வாரம் 356
குமரன் அங்கீகாரம்
வராத...
25
May
செல்வி நித்தியானந்தன் அங்கீகாரம்
எமக்காய் கிடைக்கும்
உன்னதமான விருது
எண்ணியே எந்நாளும்
உவகையாய்...