தாங்கமுடியவில்லை..!!

தாங்கமுடியவில்லை பத்து நாட்கள் திருவிழா பரவசமாய் முடிவு பெற பக்தியுடன் சனங்களும் புடைசூழ்ந்து நிற்கவே காவடி கற்பூரச்சட்டி அணிவகுத்து செல்ல அம்மன் பவனிவர அரோகரா...

Continue reading

நகுலா சிவநாதன்

தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி

நாடும் நசுக்கும் நம் மக்கள் கூட்டம்
தேடும் விழிகளுக்குள் தேங்கிய வலி
மூடும் கதவுகளும் முனைப்பாய் இறுக்க
ஆடும் ஆட்டங்களும் அரசியல் சதுரங்கமே!

தேங்கிய வலிகள் தேசத்தை நோக்க
தாங்கும் விழிகள் வரவை எதிர்பார்க்க
துாங்கா இரவுகள் துரத்தும் வேளை
நீங்கா வாழ்வாய் நித்தம் போராட்டம்

தேடும் விழிகளில் தேனாய் ஆறு
கூடும் கூட்டங்களும் அவன் வருவானா?
பாடும் குருவிகளும் அவளைக் கண்டாயா?
பறக்கும் மனமோ இயந்திர வேகமாய்!
அவன் வருவானா??

நகுலா சிவநாதன்1688

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இசை இசையோடு எல்லாம் இவ்வுலகுஇணைத்திடும் பசைபோல ஒட்டியே பாரினில் சிறந்திடும் அகிலத்தில் எல்லாமே இசையோடு சேர்ந்திடும் அன்றாட ...

    Continue reading