நகுலா சிவநாதன்

என்று தீருமோ?

வென்று நாமும் வாழ்வதற்கு
வெற்றிக்கொடி நடுவதற்கு
சென்ற எம் சிட்டுகள்
திரும்பி வருவாரோ?

தேடும் உறவுகளின் அவலம்
தேசவழிகளில் கண்கள்
கூடும் நம்உறவுகள் கண்ணீர்
எப்போ தீரும்

பேரிடரின் அவலத்தில்
ஊரிடமே உணர்வாகக் கேட்கிறோம்
விழி வைத்து பார்க்கிறோம்
விடை தருவார் யாரோ

கொடிய பசி எமை வாட்ட
கொலுவிருக்கும் என்பிள்ளை
எப்போ வருவான்? ஏக்கங்கள் சூழ
விடை தெரியா பாதையாக
விசும்பும் மக்கள்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம் _ 217 "உறைபனி" பூம்பனி பூத்திருக்கு பாத்திருக்க மலருது பார்வைக்கு அழகு பாலரின் மனதுக்கு மகிழ்வு! காடுகள்...

    Continue reading