நகுலா சிவநாதன்

என்று தீருமோ?

வென்று நாமும் வாழ்வதற்கு
வெற்றிக்கொடி நடுவதற்கு
சென்ற எம் சிட்டுகள்
திரும்பி வருவாரோ?

தேடும் உறவுகளின் அவலம்
தேசவழிகளில் கண்கள்
கூடும் நம்உறவுகள் கண்ணீர்
எப்போ தீரும்

பேரிடரின் அவலத்தில்
ஊரிடமே உணர்வாகக் கேட்கிறோம்
விழி வைத்து பார்க்கிறோம்
விடை தருவார் யாரோ

கொடிய பசி எமை வாட்ட
கொலுவிருக்கும் என்பிள்ளை
எப்போ வருவான்? ஏக்கங்கள் சூழ
விடை தெரியா பாதையாக
விசும்பும் மக்கள்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading