” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

நகுலா சிவநாதன்

சுதந்திரமாமே

சுதந்திர உள்ளம் சுடர்விடும் வெள்ளம்
விதந்தெமை அணுக விடியல் தோன்றும்
தாயக சுதந்திரம் வந்தெழில் கூட்ட
நன்றென நாமும் வென்றென எழுவோம்

இன்றளவும் எமக்கு இல்லை சுதந்திரம்
நின்றுமே போராட கிடைக்கா வரமே
75 ஆண்டுகள் எண்கள் கூடியது மட்டும்
எழிலாய் தமிழன் வாழ முடியவில்லை
பொழிலாய் ஆட்சி மாறி மாறி நிலைக்குது நாட்டில்

விடுதலை தீயும் வேட்கை தணியவில்லை
விண்ணை எட்டும் உரிமையும் இல்லை
பேச்சு மட்டும் மூச்சாய் முளைக்கும்
பேரம் பேச யாரும் இல்லை

Feb 4 சுதந்திரமே! பெருமை இல்லை தமிழர்க்கு
ஒற்றுமை ஒன்றே உறுதியாக்கும்
ஓங்கி தமிழர் உயர்ந்து நின்றால்
வேற்றுமை களைந்து ஒற்றுமைத் தமிழோடு
ஒன்றாய் வாழ வென்றே எடுப்போம்
ஒற்றுமைச் சுதந்திரம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan