மாறியதே வாழ்க்கை

சக்தி சிறினிசங்கர் வாழ்க்கையின் ஓட்டத்தில் வரும் மாற்றங்கள் வாழ்ந்துதான் தீரவேண்டும் என்ற வீணவா நிலத்திலும் புலத்திலும் நிஜ...

Continue reading

நகுலா சிவநாதன்

சுதந்திரமாமே

சுதந்திர உள்ளம் சுடர்விடும் வெள்ளம்
விதந்தெமை அணுக விடியல் தோன்றும்
தாயக சுதந்திரம் வந்தெழில் கூட்ட
நன்றென நாமும் வென்றென எழுவோம்

இன்றளவும் எமக்கு இல்லை சுதந்திரம்
நின்றுமே போராட கிடைக்கா வரமே
75 ஆண்டுகள் எண்கள் கூடியது மட்டும்
எழிலாய் தமிழன் வாழ முடியவில்லை
பொழிலாய் ஆட்சி மாறி மாறி நிலைக்குது நாட்டில்

விடுதலை தீயும் வேட்கை தணியவில்லை
விண்ணை எட்டும் உரிமையும் இல்லை
பேச்சு மட்டும் மூச்சாய் முளைக்கும்
பேரம் பேச யாரும் இல்லை

Feb 4 சுதந்திரமே! பெருமை இல்லை தமிழர்க்கு
ஒற்றுமை ஒன்றே உறுதியாக்கும்
ஓங்கி தமிழர் உயர்ந்து நின்றால்
வேற்றுமை களைந்து ஒற்றுமைத் தமிழோடு
ஒன்றாய் வாழ வென்றே எடுப்போம்
ஒற்றுமைச் சுதந்திரம்

நகுலா சிவநாதன்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் இனிமை தேன் உவமையாய் தேவன் பாடலாய் தேன்மதுர குரலாய் தெய்வீக இராகமாய் சுவையாய் சாதமாய் தித்திப்பு இனிப்பாய் பற்பல...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_238 "கோடை" கோடையில் வரும் வாடை காற்று வரவேற்பு கூறுது! பசுமை பாவடை விரிக்கும் பார்க்க அழகோவியம் பாரில் தேரோட்டம்! ரோஜாவை ராஜாவாக வாத்து...

    Continue reading