நன்றி 106

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
07-04-2026

சொல்லி தீர்க்க சொற்கள் தேடுகிறேன்
இல்லை என்று இரந்தே நிற்கின்றேன்
எல்லை அற்று உதவுவோர்க்கு இதோ
முல்லை மலராய் எந்தன் நன்றி

தளர்ந்த போதென்னை தாங்கிய கரமே
அளர்ந்த அன்பால் ஆதரவு தந்தே
உள்ளம் நெகிழ்ந்த உயிராய் மதித்தே
வெள்ளம் போல வரிகள் நன்றியே

போற்றி வளர்த்த பெற்றோருக்கு நன்றி
வெற்றி சூடிய வள்ளலுக்கு நன்றியே
சுற்றி சூழ்ந்த உறவுகளுக்கு நன்றி
பற்றுக் காட்டிய நண்பர்களே நன்றி

என்முகம் தழைக்க உதவும் வானோலி
பாமுகம் எனும் முதல் ஒலியே
தமிழை வளர்க்க தரமான உணர்வு
நிழலாய் தந்து நிமிர்த்தயவர்க்கு நன்றி

Author: