புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(96) 30/03/23
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்….

இதமான தென்றல் காற்று
மரங்களின் அசைவாடலில்
தூய்மை குன்றா நன்நீர்
தெளிவான நீர் நிலைகள்
இயற்கையோடியைந்து
ஆனந்தமாய் வாழ்ந்தான் மனிதன்

நாகரீகத்தின் உச்சம் தொட
தொழில் வளர்ச்சிப் புரட்சியிலே
காடுகள் வீடுகளாக சுற்றுப்புறம்
காற்றில்லா வனங்களாக
வெப்பத்தின் அகோரம்

வானம் பொய்த்தது
நீர்நிலைகள் வற்றியது
வற்றிய குளம் குட்டை
குப்பைமேடாகியது

கழிவுகளும் நெகிழிகளும்
ஆற்றோடு வழிந்தோடி நஞ்சாய்
கடல்நீரில் கலந்திடவே
கடல் வளமும் குன்றலாச்சு
உயிரினங்கள் மடியலாச்ச

நீரின்றி உலகு அமையாது என்பர்
மனித வாழ்வின் முக்கிய அங்கம்
சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்படாது
பாதுகாப்பது நம் கடனாமே
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading