சத்தமின்றி சாதனை செய்

இரா விஜயகௌரி வித்தகத்தை விரல் நுனிக்குள் வைத்தெடுத்தா படைத்தான் உரசி எழும் பொழுதெல்லாம் தடம் பதித்து சாதனை செய் குடும்பத்து...

Continue reading

நேவிஸ் பிலிப்

கவி இல(96) 30/03/23
கரையும் தண்ணீரில் நிறையும் கழிவுகள்….

இதமான தென்றல் காற்று
மரங்களின் அசைவாடலில்
தூய்மை குன்றா நன்நீர்
தெளிவான நீர் நிலைகள்
இயற்கையோடியைந்து
ஆனந்தமாய் வாழ்ந்தான் மனிதன்

நாகரீகத்தின் உச்சம் தொட
தொழில் வளர்ச்சிப் புரட்சியிலே
காடுகள் வீடுகளாக சுற்றுப்புறம்
காற்றில்லா வனங்களாக
வெப்பத்தின் அகோரம்

வானம் பொய்த்தது
நீர்நிலைகள் வற்றியது
வற்றிய குளம் குட்டை
குப்பைமேடாகியது

கழிவுகளும் நெகிழிகளும்
ஆற்றோடு வழிந்தோடி நஞ்சாய்
கடல்நீரில் கலந்திடவே
கடல் வளமும் குன்றலாச்சு
உயிரினங்கள் மடியலாச்ச

நீரின்றி உலகு அமையாது என்பர்
மனித வாழ்வின் முக்கிய அங்கம்
சுற்றுச் சூழலுக்குப் பங்கமேற்படாது
பாதுகாப்பது நம் கடனாமே
நன்றி வணக்கம்

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் குதூகலம் கோடை வந்தாலே கொண்டாட்டம்வந்திட ஆடையும் மாறியே அழகுடன் சேர்ந்திட ஜாடையாய்பூக்களும் அணியாய் மலர்ந்திட வாடையில்...

    Continue reading