10
Jul
தாங்கமுடியவில்லை
பத்து நாட்கள் திருவிழா
பரவசமாய் முடிவு பெற
பக்தியுடன் சனங்களும்
புடைசூழ்ந்து நிற்கவே
காவடி கற்பூரச்சட்டி
அணிவகுத்து செல்ல
அம்மன் பவனிவர
அரோகரா...
10
Jul
நாடொப்பன செய்
நாடொப்பன செய்
செய்வன திருந்திடச் செய்யும் போதினிலே
நல்லென நாட்டிற்கு அமைந்த வேளையிலே
சில்லென...
10
Jul
மரணித்தவனே மறுபடி வந்தால்
ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-07-2025
மரணத்தின் மௌனம் கலைந்து
மீண்டும் உயிர்த்தெழுவாயா?
மண்ணில் இட்ட விதை
மறுபடி...
நேவிஸ் பிலிப்,
வியாழன் கவி இல(55)
அதனிலும் அரிது
மானுடப் பிறப்பு அரிதிலும் அரிது
அதனிலும் அரிது இயற்கையோடிணைதல்
உடல்நலம் காத்து,மன நலம் பேணி
சிறப்பொடு வாழ்தல் அரிதன்றோ
அதனிலும் அரிது மாசற்ற வாழ்க்கையில்
தூயதோர் அன்பும் ,உண்மை நேசமும்
பொன்னென மிளிரும் மதிப்புள்ள வாழ்வும்
வழுவில்லா நேர்மை உழைப்பும் அரிதன்றோ.
சுத்தம் சுகம் தரும் மாசடையா சூழலிலே
நோயுற்ற வாழ்வும் இருளாகுமே
விளக்கில்லா வீதி போல
பொது நல நோக்கோடு தன்னார்வ சேவையாற்றின்
அதனிலும் அரிது வேறேது.
சுவர் இருந்தால் சித்திரம் வரையலாம்
சுகாதாரம் ஆதாரமானால் பத்திரமாய் வாழலாம்.
நோயில்லா வாழ்வும் நொடிந்து போகா மனமும்
கொண்டு அதனிலும் அரிதாக
வாழ்க்கைப் புதிருக்கு விடை தேடி
வாய்ப்புக்கள் வரும்போது கையலேந்தி
தன்னலமற்ற சிந்தையோடு
சமுதாயத்தை செப்பனிடல்
அதனிலும் எதனிலும் அரிதன்றோ…..
நன்றி வணக்கம்

Author: Nada Mohan
14
Jul
செல்வி நித்தியானந்தன்
இசை
இசையோடு எல்லாம்
இவ்வுலகுஇணைத்திடும்
பசைபோல ஒட்டியே
பாரினில் சிறந்திடும்
அகிலத்தில் எல்லாமே
இசையோடு சேர்ந்திடும்
அன்றாட ...
13
Jul
சிவாஜினி சிறிதரன் சந்த கவி
இலக்கம் _195
"கோடைகாலம்"
கோடையில் வரும்
வாடைகாற்று வசந்தத்தை வரவேற்கிது
வசலில் நிற்கும் வாழையடி...
10
Jul
ஜெயம்
இசைக்கு மயங்காதோர் இவ்வுலகில் இல்லை
இசையொன்றே தாண்டிவிடும் ஜாதிமத எல்லை
இறைவனுக்கு...