பாசப்பகிர்வினிலே

ராணி சம்பந்தர்

தரணியில் தாயின் நேசந்தனை
வாயினால் சொல்லத் தமிழிலே
எந்த வார்த்தையும் வரவில்லையே

பத்து மாதம் கரு சுமந்த போதும்
வலி வேதனை சூழ்ந்த போதுமே
துன்பமின்றி இன்பமோடு ஏற்ற
உலகம் போற்றும் உத்தமித்தாயே

தன் உதிரத்தைப் பாலாக்கியே
ஊட்டி வளர்த்து உரம் தந்தவரே
உம் பொறுமையே பூமியிலந்த
அவதாரம் பாசப்பகிர்வினிலே

சேலைத் தலைப்போடு ஒட்டிய
ஒட்டுண்ணியாம் எம் விதியின்
சதியாலே தொட்டு வணங்கும்
தெய்வமதைத் தனியே தவிக்க
விட்ட பாவிகள் இறுதிக்கடனே
செய்யாமல் நன்றி கெட்டவர்
ஆனோமே .

Nada Mohan
Author: Nada Mohan

சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

Continue reading