“பள்ளிப்பருவத்திலே”..!!

சிவதர்சனி இராகவன் வியாழன் கவிதை நேரத்துக்காக கவி -2152 “பள்ளிப்பருவத்திலே”!! கள்ளமில்லாத உள்ளம் கொண்டோம் களங்கமில்லாத செயலுங்கண்டோம் வெள்ளிச்சிரிப்பொலிபூண்டுநின்றோம் அள்ளி நட்பை...

Continue reading

பாதை மாறும் மானிடர்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து 27.02.25 ஆக்கம் 351

27.02.25
ஆக்கம் 351
பாதை மாறும் மானிடர்

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு
மாறாகத் திசை திருப்பி
ஏற்றியோ அல்லது
இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில்
எதுதான் முடிவோ
இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகப் பட்டு விடும்

மாற்றிய திசையில்
தேடிய பரிதவிப்பு
மாறிட புதிய பாதையில்
பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர்.

Nada Mohan
Author: Nada Mohan