பாதை மாறும் மானிடர்

ராணி சம்பந்தர் ஜெர்மனியிலிருந்து 27.02.25 ஆக்கம் 351

27.02.25
ஆக்கம் 351
பாதை மாறும் மானிடர்

வாழ்க்கையில் வீசும் காற்று நினைப்பதற்கு
மாறாகத் திசை திருப்பி
ஏற்றியோ அல்லது
இறக்கியோ விட்டு விடும்

ஏறும் பாதையில்
எதுதான் முடிவோ
இதுதான் விடிவோ
ஏதும் நேருமோ யாதுமே
விதியாகப் பட்டு விடும்

மாற்றிய திசையில்
தேடிய பரிதவிப்பு
மாறிட புதிய பாதையில்
பூத்திருக்கும் வசந்த கால மலர்களாய் மானிடர்.

Nada Mohan
Author: Nada Mohan

ராணி சம்பந்தர் பேரிடர் எனும் பெருந்துயரே ! போரிடரில் நிர்க்கதியாகிய மானிடர் உயிரில் நீர்த்தாகமா? நூறிடர் வருமெனக் கூறிடர்...

Continue reading

சிவாஜினி சிறிதரன் சந்த கவி இலக்கம்-214 "பேரிடர்" இயற்கையின் சீற்றம் பஞ்சபூதங்களின் தெறிப்பு பரிதவிக்க வைத்தது மக்களை பார்க்கவே பயமாக இருந்தது! ஊர்மனைகளுக்குள் இயந்திர...

Continue reading