புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா 10-04-2025 புத்தாண்டே வா புதுமை பொலிவுடனே புலத்தில் நிம்மதியும் பூகோளத்தில் அமைதியும் சோகங்கள் விட்டு சொந்தங்கள் சேர்ந்து சொல்பேச்சு கேட்டு சொர்க்க...

Continue reading

இன்னமும் மாறவில்லை

நகுலா சிவநாதன் இன்னமும் மாறவில்லை காலநிலை இன்னமும் மாறவில்லை கடும் குளிரும் குறையவில்லை பாட்டு வெயிலும் பகலவன் ஒளியும் கூட்டுது...

Continue reading

பாலதேவகஜன்

நேரம்

காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்.

ஏன் இந்த நிலை எனக்கு
உன் கருவில் நான்
தரித்திட்ட நேரம் தவறா?
இல்லை நான் பிறந்திட்ட
நேரம் தவறா?
என் சரியில்லா நேரம்தான்
உந்தன் உயிரை பிரிய வைத்ததுவோ?

நேர்த்தியோடு எனை வளர்த தாயே!
பூர்த்தியான வாழ்வுக்குள்
நான் நுழையும் தறுவாய்
நீ! தவறிப்போனதினால்
என் வாழ்வு பூச்சியமானது.

ஒருத்தி உனை பிரிந்ததினால்
வருத்தி போட்டது வாழ்வு
கால ஓட்டத்திலும் கலையாத
உன் பிரிவின் வலி
என் காலம் உள்ளவரை
என்னை கலங்க வைத்திடுமே

எனக்கான நேரம்
எப்போதுதான் பிறக்குமோ!
அப்போது ஆனந்தம்
என்னில் நிலைக்குமோ!
தப்பாத உன் நினைப்பு
அந்த ஆனந்தத்தை
தள்ளித்தான் வைக்குமோ!

Nada Mohan
Author: Nada Mohan

    வஜிதா முஹம்மட் சந்திர நாட்காட்டி சரித்திர வழிகாட்டி புனிதப்பட்ட மாதம் புரையோடிய பாவத்தின் மன்னிப்பு நோன்பின்நேரம் இறைகட்டளையை நினைவூட்டி மனித...

    Continue reading