சிறகடிக்கும் நினைவலைகள்

இரா.விஜயகௌரி சிந்தனைச் சுழல் விரிய செம்மையுறும் எழில் பொழிய விந்தையென நினைவில் எழும் வீரியத்தின் சுந்தரங்கள் எந்தையும் தாயும் இணை கனவெழுதும்...

Continue reading

நெருப்பு நினைவுகள்…..

ரஜனி அன்ரன்(B.A) நெருப்பு நினைவுகள்.. 23.07.2026 இன்றையநாள் யூலை இருபத்திமூன்று அன்றைய கறுப்புயூலையின் நெருப்புநினைவுகள் கனதியாய்...

Continue reading

பாலதேவகஜன்

நேரம்

காலநேரம் பார்த்தியம்ப
பக்கத்தில் நீ இல்லை அம்மா!
குறுகிய காலத்தோடு
குன்றிப்போன உன் ஆயுளுக்காய்
இன்றுவரை அழுதபடி
இன்பமில்லாதவனாய் இருக்கின்றேன்.

ஏன் இந்த நிலை எனக்கு
உன் கருவில் நான்
தரித்திட்ட நேரம் தவறா?
இல்லை நான் பிறந்திட்ட
நேரம் தவறா?
என் சரியில்லா நேரம்தான்
உந்தன் உயிரை பிரிய வைத்ததுவோ?

நேர்த்தியோடு எனை வளர்த தாயே!
பூர்த்தியான வாழ்வுக்குள்
நான் நுழையும் தறுவாய்
நீ! தவறிப்போனதினால்
என் வாழ்வு பூச்சியமானது.

ஒருத்தி உனை பிரிந்ததினால்
வருத்தி போட்டது வாழ்வு
கால ஓட்டத்திலும் கலையாத
உன் பிரிவின் வலி
என் காலம் உள்ளவரை
என்னை கலங்க வைத்திடுமே

எனக்கான நேரம்
எப்போதுதான் பிறக்குமோ!
அப்போது ஆனந்தம்
என்னில் நிலைக்குமோ!
தப்பாத உன் நினைப்பு
அந்த ஆனந்தத்தை
தள்ளித்தான் வைக்குமோ!

Nada Mohan
Author: Nada Mohan