திசை மாறும் திருப்பங்கள்…….

இரா விஜயகௌரி பிறக்கும் போதே இறப்பெழுதி இறப்பை மறுத்து மறந்தே வாழ்வெழுதி உருண்டு ஓடும் தினங்களுள்ளே உளைச்சலில் உழலும்...

Continue reading

பாலதேவகஜன்

இதயம்

எதை எதையோ சுமந்து
பதை பதைத்த என் இதயம்
சுமைகளை இறக்கி
சுகம் காண்பது எப்போ?

வகை வகையாய் வலிகளை
வாரியிறைத்த காலம்
வாழ்விலே எனக்கு மட்டுமாய்
கொடுக்கப்பட்ட
வரையறையின்றி போன காயம்.

எத்தனை அடிகள்
அத்தனையையும் தாண்டி
எழுந்துகொள்ள
எத்தனிக்கும்போதெல்லாம்
மறுதலிக்கும் மாயம்.

சுடுமணலில் ஈரமாய்
சுருங்கிக்கொண்ட கணங்களே!
நான் சுகம் காணும் நேரம்.
மகிழ்வென்ற ஒன்றை மட்டுமே
உமிழ்ந்து கொண்டிட
மறுக்குதே என் இதயம்.

மாறும் மாறும் என்ற நிலை
மாற்றமின்றியே நகருதே
தேறும் தேறும் என்ற நிலை
தேற்சியின்றியே கரையுதே.

வாழ்வின் பிடிப்பையே
நொருக்கிப்போட்டவள்
இதய பிடிப்பிலிருந்து
இன்றுவரை விலகாதவள்

என் இதயம் தாங்கிய
வலிகளுக்குள் உச்சமாய்
இன்றும் எனை உலுப்பும்
வலியாகிப் போனவள்

என் இதய கூட்டைவிட்டு
இடம்மாறிப் போனவள்
அவள் இருந்த இடத்தினை
வலிகளால் மட்டுமே நிரப்பி

வாழ்வின் நீட்சிவரை
அவளின் நினைவுகளால்
அவதியுறும் வாழ்வோடு
ஆனோமே என்ற தாக்கமதை

என் இதயம்
தாங்கும் சக்தியுள்ளவரை
தாங்கி கடப்பேனே தவிர
வேறொருத்தியை தங்கிட வையேன்.

Nada Mohan
Author: Nada Mohan

    செல்வி நித்தியானந்தன் கோடை கோடை வந்தாலே கடற்கரை மோகம் வாடை என்றாலும் எடுக்குதே தாகம் ஆடை மாற்றமும் பலரது தேகம் ஜாடை காட்டியே பூக்களின்...

    Continue reading

    சிவாஜினி சிறிதரன் கவி இல_ 237 "வெற்றி" உழைப்பை உரமாக்கி முயற்சியை மூலதனமாக்கி முயல்றால் முற்றிலும் வெற்றி முயலும் உன்னை முந்தாது! அடைய வேண்டிய...

    Continue reading