” கதிரும் தமிழும் “

ரஜனி அன்ரன் (B.A)....கதிரும் தமிழும்... 28.05.2026 கதிரவன்ஒளியும் கன்னித்தமிழும் காசினியில் யாவர்க்கும் பொதுவே வாழ்விற்கும் நல்லொளியே வானின்உயர்வில் கதிரவன்உயிர்ப்பு பொதிகைமலை...

Continue reading

கரைதலும் புரிதலும்……..

இரா.விஜயகௌரி கரைகின்ற கணங்களுக்குள் உறைகின்ற வாழ்வை -நாம் கணமேனும் சிந்தித்து நிலைத்தோமா நொடியாய் விரைகின்ற மணித்துளிகள் உரசி எழும் செயலால் கரைகின்ற கணங்களுக்குள் காத்திரமாய்...

Continue reading

பாலதேவகஜன்

இதயம்

எதை எதையோ சுமந்து
பதை பதைத்த என் இதயம்
சுமைகளை இறக்கி
சுகம் காண்பது எப்போ?

வகை வகையாய் வலிகளை
வாரியிறைத்த காலம்
வாழ்விலே எனக்கு மட்டுமாய்
கொடுக்கப்பட்ட
வரையறையின்றி போன காயம்.

எத்தனை அடிகள்
அத்தனையையும் தாண்டி
எழுந்துகொள்ள
எத்தனிக்கும்போதெல்லாம்
மறுதலிக்கும் மாயம்.

சுடுமணலில் ஈரமாய்
சுருங்கிக்கொண்ட கணங்களே!
நான் சுகம் காணும் நேரம்.
மகிழ்வென்ற ஒன்றை மட்டுமே
உமிழ்ந்து கொண்டிட
மறுக்குதே என் இதயம்.

மாறும் மாறும் என்ற நிலை
மாற்றமின்றியே நகருதே
தேறும் தேறும் என்ற நிலை
தேற்சியின்றியே கரையுதே.

வாழ்வின் பிடிப்பையே
நொருக்கிப்போட்டவள்
இதய பிடிப்பிலிருந்து
இன்றுவரை விலகாதவள்

என் இதயம் தாங்கிய
வலிகளுக்குள் உச்சமாய்
இன்றும் எனை உலுப்பும்
வலியாகிப் போனவள்

என் இதய கூட்டைவிட்டு
இடம்மாறிப் போனவள்
அவள் இருந்த இடத்தினை
வலிகளால் மட்டுமே நிரப்பி

வாழ்வின் நீட்சிவரை
அவளின் நினைவுகளால்
அவதியுறும் வாழ்வோடு
ஆனோமே என்ற தாக்கமதை

என் இதயம்
தாங்கும் சக்தியுள்ளவரை
தாங்கி கடப்பேனே தவிர
வேறொருத்தியை தங்கிட வையேன்.

Nada Mohan
Author: Nada Mohan