புத்தாண்டே வா -56

ஜெபா ஸ்ரீதெய்வீகன் -கனடா
10-04-2025

புத்தாண்டே வா
புதுமை பொலிவுடனே
புலத்தில் நிம்மதியும்
பூகோளத்தில் அமைதியும்

சோகங்கள் விட்டு
சொந்தங்கள் சேர்ந்து
சொல்பேச்சு கேட்டு
சொர்க்க பூமியாக்கி

பெற்றவரை மதித்து
பேராண்பை பூண்டு
பெண்ணடிமை தகர்த்து
பிறப்பில் பேதமற்று

மரங்களை நாட்டி
மற்றான் நலம்பேணி
மதவெறி அகற்றி
மனிதநேயம் காத்து

புத்தாண்டே நீ
புலர்ந்து வா
புன்னகை மலராய்
பூத்துக்குலுங்க வா..

Jeba Sri
Author: Jeba Sri

வசந்தா ஜெகதீசன் அறிவாலயம் அனலானதே .... காலத்தின் பெட்டகமே காவியத்தின் பொக்கிசமே கடைக்கழக நூல்களின் தேட்டத்து நூலகமே எண்ணற்ற பதிவுகளால் பூத்திருந்த பூஞ்சோலை காடையரின்...

Continue reading